வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கான பிரத்தியேக பிரிவு – அமெரிக்கா

260 0

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவான சீ.ஐ.ஏ. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கான பிரத்தியேக பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது.

‘கொரிய மையம்’ என்ற பெயரிலான இந்த பிரிவு, சீ.ஐ.ஏ தலைமையகம் அமைந்துள்ள வேர்ஜினியாவில் இயங்கும்.

இதில் சீ.ஐ.ஏ அமைப்பின் சிறந்த அனுபவம் கொண்ட பல அதிகாரிகளும், ஆய்வு நிபுணர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

வடகொரியாவினால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அணுவாயுத அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் வடகொரியாவினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலை முன்னறிந்து தடுக்கும் வகையில் இந்த குழு இயக்கும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.