நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

201 0

மாத்தறை – வெலிகம – பாதேகம பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த நபர் தானசாலையில் உதவிகளை செய்து கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய குழுவொன்றால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர், பாதகம பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்காக காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.