தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும்

205 0

தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களுக்கு போதுமான அளவு செய்து விட்டேன். எனி தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திரிப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்.

நான் சிங்கள மக்களுக்கு எதுவும் செய்யாமல் தமிழர்களுக்கு மாத்திரம் செய்வதாக தென்னிலங்கையை சேர்ந்த சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.சிங்களவர்களுக்கு வேண்டியளவு செய்து விட்டேன். அதற்கான என் வாழ் நாளின் அதிகளவான காலத்தில் செலவிட்டுள்ளேன்.

நாட்டில் சமாதானத்தை கொண்டு வரும் முயற்சியில் எனது உயிர் பறி போகும் அபாய நிலை ஏற்பட்டது. எனது கண் இல்லாமல் போய் விட்டது.தற்போது சிங்களவர்களுக்காக வேலை செய்வதற்கு கிட்டத்தட்ட 200 பேர் உள்ளனர். தமிழர்களுக்காக எதனையும் செய்வதற்கு பிரபாகரன் இடமளிக்கவில்லை.

தற்போது தான் தமிழ் மக்களுக்காக வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.