வவுனியா வடக்கு கல்வி வலயம் நடத்திய முழு நிலா கலை விழா நேற்று வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
வவுனியா வடக்கு கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பிரதேசத்தினை சித்திரிக்கும் ஊர்திகளும் வலம் வந்திருந்தன.
நிகழ்வில் விருந்தினர்கள் வவுனியா நெடுங்கேணி முருகன் ஆலயம் முன்பாக மாலை அணிவித்து ஊர்திகள் சகிதம் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு நெடுங்கேணி மகா வித்தியாலய மைதானத்தில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது.
நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, ஆர்.இந்திரராசா, செ.மயூரன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்