பாதையாத்திரை செல்பவர்கள் தொடர்பில் – ரவி கருணாநயக்க

420 0

ravi-640x40011 வருடங்கள் ஆட்சியில் இருந்த மஹிந்த அணியினர், மக்களுக்கு சேவை செய்திருந்தால் இவ்வாறு பாதயாத்திரைகள் செல்ல தேவையில்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவர்கள் மக்களுக்கு சேவை செய்யாது மோசடிகளையே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

ஆயுதங்களை கொள்வனவு செய்தவர்கள், வசீம் தாஜூதின் கொலையுடன் தொடர்புடையவர்களே பாதயாத்திரையில் ஈடுப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

உடற்பயிற்சிக்கானவே அவர்கள் பாதயாத்திரை செய்வதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை, மஹிந்த அணியின் பாதயாத்திரை தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதயாத்திரையில் தொண்டர்கள் நடைப்பயணமாகவும் தலைவர்கள் வாகனங்கள் மூலம் செல்வதாகவும் குறிப்பிட்டார்.