விடுதலை புலிகளுக்கு உதவியதாக ஈரானியர் மீது குற்றச்சாட்டு

398 0

Ltte_Pepople1-500x250ஈரானின் முக்கிய மோசடிக்காரராக கருதப்படும் ஒருவர், போரின் போது விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தப்பிச்செல்ல உதவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோசடிக்காரர் தற்போது தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், சில ஆயிரம் டொலர்களுக்காக  உலகின் கதவுகளை திறக்கும் வகையில் போலியான கடவுச்சீட்டுக்களை தயாரித்து தீவிரவாதிகள், அகதிகள் மற்றும் குடிபெயர்ந்தவாளர்களுக்கு விநியோகித்துள்ளதாக ஏஎஸ்பி செய்திசேவை தெரிவித்துள்ளது.
பேங்கொக்கில் உள்ள அமைதியான வீடு ஒன்றில் இருந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
48 வயதான Hamid Reza Jafary என்ற இவர், கடந்த பல வருடங்களாக அவதானிக்கப்பட்ட நிலையிலேயே கடந்த வாரம் தாய்லாந்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.