அடைக்கலம் கோரிய சிறுமியை மீண்டும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு

354 0

60064மாத்தறை பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி அடைக்கலம் பெற்றபோது அவரை மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.
அவருக்கு எதிராக வெளிநாடு செல்ல முடியாதப்படி தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம்,கடந்த 10ஆம் திகதியில் இருந்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவி;த்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதியன்று தமது 12வயதான மகளை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர், பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களை அடுத்து ஜூலை 21ஆம் திகதியன்று சிறுமி மீட்கப்பட்டார்.
பொலிஸ் விசாரணைகளின்படி குறித்த சிறுமி கடத்தப்பட்டு ஒரு சந்தர்ப்பத்தில் பலரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
பின்னர் அவர் மற்றும் ஒரு வீட்டுக்கு மாற்றப்பட்டு அங்கும் பலரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சிறுமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் அகதியாக தமது தாய், வழமையாக செல்லும் விஹாரைக்கு சென்று அடைக்கலம் பெற்றுள்ளார்.
இதன்போதே அங்குள்ள பௌத்தபிக்கு குறித்த சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார். இதேவேளை சிறுமி முதல் இரண்டு தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 12 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் படைவீரரி ஒருவரும் வன்புணர்வை மேற்கொண்டவர்களுக்கு அறை வசதிகளை செய்துக்கொடுத்த பெண் ஒருவரும் அடங்குகின்றனர்.