விசாக பண்டிகை – இலங்கை முழுவதிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

229 0

விசாக பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.

சீருடையுடனான காவல்துறையினரை தவிர, சிவில் உடையிலும் காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விசாக பண்டிகை வலயமான கொழுப்பில், விசேட கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, விசாக பண்டிகை காலத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம், நடைமுறைப்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.