வட மாகாணத்தில் இந்திய – இலங்கை நட்புறவு மையம்

377 0

வடக்கு மாகாணத்தில் சுமார் 300 கோடி இந்திய ரூபாய் செலவில் இந்திய – இலங்கை நட்புறவு மையம் ஒன்று நிறுவப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய – இலங்கை நட்புறவு மையத்தின் நடவடிக்கை பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்த நட்புறவு மையம் கிளிநொச்சி – பளை பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் அமைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.