மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு அரசாங்கத்தின் சதி- டளஸ் எம்.பி. குற்றச்சாட்டு

457 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகள் நீக்கப்படுவது அரசாங்கத்தின் சதிகார நடவடிக்கையாகும் என கூட்டு எதிர்க் கட்சி சார்பு பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்ந்தேர்ச்சியாக குறைக்கப்படுவது தொடர்பில், அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களின் கருத்து என்னவெனவும் டளஸ் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.