நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் – திணைக்களம்

227 0

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரங்களில் காலை வேளையில் மழை பொழியக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 50 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது