மாணவனிடம் இரத்த பரிசோதனை – விசாரணைகள் ஆரம்பம்

236 0

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் பாடசாலையின் மாணவனிடம் இரத்த பரிசோதனைக்காக என்று கூறி இரத்தம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைத்த முறைபாடொன்றின் அடிப்படையில் காவல்துறையினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா அல் ஆதான் வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரிடம் அடையாளம் தெரியாத சிலரால் இரத்த பரிசோதனைக்காக இரத்தம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் இவ்வாறு குருதியில் எச்.ஐ.வி தொற்றை செலுத்துவதாக பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.