புதிய தேர்தல் முறை – சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது – ரவுப் ஹக்கிம்

242 0

புதிய தேர்தல் முறை தொடர்பில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ள நிலையில் அது தொடர்பில் இறுதியான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்ற வரை அடுத்த தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாரில்லையென ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் காங்கிரஸன் தலைவர் ரவுப் ஹக்கிம் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இன்னும் குழப்பமான நிலையே காணப்படுகின்றது.

குறிப்பாக எல்லை நிர்ணயம் தொடர்பிலும் பிரச்சினை காணப்படுகின்றது.

பெண்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை அதிகரிக்கப்பட்ட வேண்டும் என்கின்ற நிலையிலும் பிரச்சினை காணப்படுகின்றது.

இந்தநிலையில் இவற்றுக்கு இடையில் சிறுபான்மையினரின் உரிமைகள் இவற்றின் ஊடாக பாதுகாப்படவில்லை.

அதனை நிவர்த்திக்கும் வரையில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல முடியாது எனவும் அமைச்சர் ரவுப் ஹக்கிம் குறிப்பிட்டார்.