கணவரை காணவில்லை –  மனைவி, மகள் மற்றும் மருமகன் தலைமறைவு

240 0

வத்தளை கெரவல பிட்டிய பிரதேசத்தில் 65வயதான ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரது மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ளவர் வெளிநாட்டில் பணியாற்றுவதாக குடும்பத்தினர் வெளியிட்ட தகவல் தொடர்பில் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய முறைப்பாடு ஒன்றிற்கு அமைய காவற்துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தகவலில் அவர் வெளிநாடு செல்லவில்லையென்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.