தமிழ் மக்களை பொறுத்தவரை முன்னைய ஆட்சிக்கும் நல்லாட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை – மு. சந்திரகுமார்

239 0

தமிழ் மக்களை பொறுத்தவரை முன்னைய ஆட்சிக்கும் நல்லாட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இரணைமாதா நகரில் ஏழாவது நாளாகவும் கவனயீர்ப்பில் ஈடுப்படும் மக்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்  போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எல்லா ஆட்சியிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஒரே மாதிரியே அனுகப்படுகிறது.

இந்த நிலையில், இன்றைய சூழலில் வடக்கு கிழக்கில் மக்கள் அரசாங்கத்தையும் எதிர்பார்க்காது வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளையும் எதிர்பார்க்காது தங்களின் பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக்கொள்ளும் பொருட்டு போரட்டங்களை ஆரம்பித்துள்ளதாக சந்திரகுமார் குறிப்பிட்டார்.