சுகாதார சேவைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள் – இணைய தளங்கள் தொடர்பில் காவல்துறை குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் முறைப்பாடு

225 0

இலங்கையின் சுகாதார சேவைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணைய தளங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சு, காவல்துறை குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைக்கு அமைய தொற்றா நோய் தடுப்பு பிரிவினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளர்கள் என்ற போர்வையில் சிலர் எய்ட்ஸ் தொற்றை பரப்புவதாக அண்மையில் வலைதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.