விசாக பூரண தின நிகழ்வுகள் – மக்களின் பாதுகாப்பின் பொருட்டு விஷேட நடவடிக்கைகள்

281 0

விசாக பூரண தின நிகழ்வுகளை முன்னிட்டு நகரப்பகுதிகளுக்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பின் பொருட்டு விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, குற்ற புலனாய்வு பிரிவு மற்றும் விஷேட காவற்துறையினர் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் விசாக் பூரண தின அரச நிகழ்வுக்கான விசாக பண்டிகை வாரம் இன்றுடன் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.