அரச மருத்துவர்கள் மீது சந்திரிக்கா குற்றச்சாட்டு

279 0

அரச மருத்துவமனைகளில் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பணத்திற்காக நோயாளர்களுக்கு மருந்து வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனநாயக நாட்டில் போராட்டத்தை மேற்கொள்ள முடியும் எனினும் தவறான விடயத்திற்காக தவறாக போராட்டம் மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.