ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி 31ஆம் திகதி முதல் போராட்டம்

315 0

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை நடத்­தும்­படி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தியும் அரச சொத்­து­களை   விற்­பனை செய்­வ­தையும் அரச நிறு­வ­னங்­களை தனியார் மயப்­ப­டுத்­து­வ­தையும் நிறுத்தக் கோரியும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி இம் மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு தழு­விய போராட்­டத்தில் ஈடு­ப­டப்­போ­வ­தாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் தேசிய அமைப்­பாளர் ரஞ்சித் சொய்யா நேற்று      தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் பின்­போ­டப்­பட்டு சுமார் இரண்டு வரு­டங்­க­ளா­கின்­றன. இது­வரை          அர­சாங்கம் இத்­தேர்­தலை நடத்த எது­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை. அத்­துடன் இந்த அர­சாங்கம் அரச நிறு­வ­னங்­களை தனியார் மயப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு       வரு­கி­றது. மேலும் அரச சொத்­துகள், காணிகள் வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. இந்த மக்கள் விரோத நட­வ­டிக்­கை­களை எதிர்த்து மக்களை ஒன்றுதிரட்டி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது