போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் – மனோ உறுதி

277 0

பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களைக் கொண்ட புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் நட­வ­டிக்கை குழுவின் பேச்­சு­வார்த்­தை­களின் படி தயா­ரிக்­கப்­பட்ட இடைக்­கால அறிக்­கையின் வரை­வொன்று கடந்த 4 ஆம் திகதி நட­வ­டிக்கை குழுவில் அங்கம் வகிக்கும் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

 

இந்த அர­சியல் கட்­சி­களின் கருத்­து­களை இம்­மாதம் 23 ஆம் திக­திக்கு முன்னர் அறி­விக்கும் படியும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன் பின்னர் இக்­கட்­சி­களின் ஆய்வுக் கருத்­து­க­ளுடன் அர­சி­ய­ல­மைப்­புக்­கான நட­வ­டிக்­கைக்­குழு எதிர்வரும் 23 ஆம், 24 ஆம், 25 ஆம் மற்றும் 26 ஆம் திக­தி­களில் கூடு­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அர­சியல் கட்­சி­களின் ஆய்­வு­களின் படி பேச்­சு­வார்த்­தை­களின் பின்னர் தயா­ரிக்­கப்­படும் நட­வ­டிக்கை குழுவின் இறுதி அறிக்கை, பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்டு பின்னர் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாறி தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாடு காணப்படும்.