மக்களின் அங்கிகாரத்துடன் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்க முடியாது – பிரதமர்

193 0

மக்களின் அங்கிகாரத்துடன் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க தொழிற்சங்கங்களுக்கு இடமளிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்துடன் கலந்துரையாட முடியும்.
அதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறுகிய நோக்கங்களுக்காக அரசாங்கத்தை கவிழ்க்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

முடிந்தால் அடுத்துவரும் தேர்தல்கிளல் மக்களின் பிரச்சினைகளுக்கு மாற்று தீர்வுகளை ஏற்படுத்துவதற்கான யோசனைகளை முன்வைத்து அரசாங்கத்தை கவிழ்க்க முடியும்.

அவ்வாறின்றி, மக்களின் விருப்பில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில் அதற்கு எதிராக அரசாங்கம் கடுமையாக செயற்படும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.