தமது அனுமதி இன்றி இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கூடாது – வடமாகாண கடற்றொழிலாளர்

180 0

தமது அனுமதி இன்றி இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கூடாது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கோரியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இந்த கோரி;கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை வருகிறார்.

இதன்போது, இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பதாற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பட்சத்தில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை வரும் பிரதமர் மோடி கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமான பதிலை வழங்கவேண்டும் எனவும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கோரிக்கை விடுத்துள்ளது.