தமதுமக்கள் சொந்த நிலத்தில் குடியேறுவதை தடுக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது – டக்ளஸ் தேவானந்தா

186 0

தமது மக்கள் சொந்த நிலத்தில் குடியேறுவதை தடுக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் செயலாளர் நாயனம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

25 வருடங்களாக தமது சொந்த நிலத்திலிருந்து இடம்பெயர்ந்து இன்னும் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.

அந்த மக்களின் பூர்வீக நிலங்களை விடுவித்து மீளக்குடியமர்வதைத் தடுக்கும் எந்தக் காரணங்களையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் தமது சொந்த நிலத்தில் வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்த கோரிக்கை விடுத்துள்ளார்.