இலங்கையில் கடற்தொழில் துறையை அபிவிருத்தி செய்ய சீனா முன்வந்துள்ளது.
இதற்கமைய மட்டக்களப்பில் மீன்பெருக்க மத்திய நிலையம் ஒன்றை உருவாக்க உதவியளிப்பதாக சீனா குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சீனாவின் விவசாயதுறை அமைச்சர் சென் சியாஹோ, அமைச்சர் மஹிந்த அரவீரவை சந்தித்த போதே இது தொடர்பான இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கடற்றொழில்துறை அபிவிருத்திக்கான தொழில்நுட்ப உதவிகளையும் சீனா வழங்கவுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.