சைட்டம் எதிர்ப்பு – அரசாங்கத்திற்கு எதிரான சதி

281 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியான சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் மேற்கொள்ளும் போராட்டங்களானது அரசாங்கத்துக்கு எதிரான சதி முயற்சி என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சைட்டம் கல்லூரியின் தலைவர் நெவில் பெர்னான்டோ இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராடுபவர்கள் என்ற போர்வையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சி மேற்கொள்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.