காலி – திக்கும்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ள நிலையில், இதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த 42 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.