பொரளையில் 8 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது

224 0

மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்திச் செல்லப்பட்ட மேலும் ஒரு விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பொரளை பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட இந்த விபச்சார விடுதியை மேல் மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவினர் நேற்று சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது அதன் முகாமையாளர் மற்றும் விபச்சார விடுதியை நடாத்திச் செல்ல உதவிய இருவரும், மேலும் 8 பெண்களும் கைது செய்யப்பட்டுள்னர்.

மேலும் தாய்லாந்தை சேர்ந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் 22 தொடக்கம் 37 வயதிற்கும் இடைப்பட்ட கொழும்பு, உக்குவெல, பெலன்னறுவை கம்பஹா, கல்கமுவ மற்றும் அவிசாவளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.