பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையொன்றின் சடலம் மீட்பு

220 0
லிந்துலை பகுதியில் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிந்துலை – பாமஸ்டன் ரத்னகிரிய பகுதியில் உள்ள ஓடையில் வைத்தே குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் காவற்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், சடலம் மீதான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.