பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

255 0

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 10 பேருக்கு பிணையில் செல்ல இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொம்பேயில் குப்பை சேகரிக்கும் இடத்திற்கு குப்பைகளை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறித்து நீதிமன்றில் முன்னிலையாகுமாறு குறித்த அனைவருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவர்கள் பூகொடை நீதிமன்றில் இன்று முன்னிலையாகியபோது, இந்த பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீதியை இடைமறித்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை முதலானவை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.