2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளின்போது தீவிரவாதத் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கூறி கைதான 8 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்த குழுவினரே இந்த தாக்குதலை நடத்த முயற்சி எடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றிருந்தது.
கைதான பிரேசில் நாட்டைச் சேந்தவர்கள் எட்டு பேருக்கும், 15 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.