ஒரு வயது மகளை துன்புறுத்திய தந்தை கைது!

203 0

ஒரு வருடமும் 03 மாதங்களுடைய தனது மகளை அடிக்கடி தாக்கி சித்திரவதை செய்ததாக கூறஙப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது.

வனாத்தவில்லு 11ம் கட்டையை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இதற்கு முன்னர் கசிப்பு மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதுடன், பின்னர் மேசன் தொழிலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மகள் தந்தையால் அடிக்கடி தாக்கி துன்புறுத்தப்படுவதாக 22 வயதுடைய தாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துன்புறுத்தப்பட்ட சிறுமி வைத்தியப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வனாத்தவில்லு பொலிஸ் நிலைய அதிபர் உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.