பணிக்கு வராதவர்கள் விலகியதாக கருதப்படுவர்

344 0

ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் சாரதிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று இலங்கை புகையிரத சேவை கூறியுள்ளது.

இன்றைய தினம் பணிக்கு சமூகமளிக்காத ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான சாரதிகள் பணியிலிருந்து நீங்கியதாக கருதப்படுவர் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார். இன்று காலை வழமை போன்று அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இன்று காலை 08 மணியின் பின்னர் புகையிரதங்கள் போக்குவரத்தில் ஈடுபடாது என்று லோகோமோட்டிவ் பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

இன்றைய நாளில் சேவையில் ஈடுபடவுள்ள ஏனைய 300 புகையிர சேவைகளில் முக்கியமான 30 புகையிரதங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அவர் கூறினார். அத்துடன் தேவையான எண்ணெய் விநியேகத்தை வழமை போன்று வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.