கண்டியில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில், நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவான மக்கள் கலந்துகொண்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.