சீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் சுற்றுலா பிரயாணமாக நுவரெலியாவிலிருந்து எல்லநகரிற்கு வாடகை கார் ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த வேளை குறித்த கார் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை வெலிமடை பிரதான வீதியின் மிரஹாவத்த எனுமிடத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்தவர், பண்டாரவளை திகனதென்ன பகுதியை சேர்ந்த 54 வயதுடைய லலித்சாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மிரஹாவத்தை தபால் நிலையத்தில் சேவையாற்றுபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காரை செலுத்திய சீனநாட்டு சுற்றுலா பிரயாணி வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் வாகன அனுமதிப்பத்திரம் காலாவதியாகி இருந்ததோடு ஓட்டுனருக்கான அனுமதிப்பத்திரமும் ஓட்டுனரிடமும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.