ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள வானூர்தி நிலையம் விற்பனை செய்யப்படாது

313 0

malik-415x260ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள வானூர்தி நிலையம் என்பன எந்த நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகமும் மத்தள வானூர்தி நிலையத்தையும் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவதாக தெரிவிக்கப்படுகின்றன.
எனினும் அவ்வாறான எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அமைச்சர் சரத் அமுனுகமவும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.