வடக்கில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்

346 0

rejinord-kureவடக்கில் இடம்பெயர்ந்தவர்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் மீள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதனை தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் நேற்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் உள்ளிட்ட தரப்பினரை அவர் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின் போதே, வடக்கு ஆளுநர் இந்த தகவலை தெரிவித்தார்.
அத்துடன் இன நல்லிணக்கத்தின் பொருட்டு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.