சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

279 0

08-1-1140x885எந்தவித பாகுபாடுகளும் இன்றி, அனைவருக்கும் பொதுவாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சட்டத்தை நாடியுள்ள பொதுமக்களுக்கு அதில் காணப்படும் தாமதத்தை தவிர்ப்பதற்கு சம்பந்தபட்ட தரப்பினர் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்குமாறு பிரதம நீதியரசர் உள்ளிட்ட சட்டத்துறையினர் அனைவரிடமும் திறந்த கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மூதூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.