வைத்தியபீட பேராசிரியர்களும் வேலைநிறுத்தத்தில்

226 0

மாலபே தனியார் வைத்தியக் கஸ்லூரியை மூடுமாறுக் கோரி நாளைய தினம் அனைத்து பல்கலைக்கழக வைத்தியபீட பேராசிரியர்களும் தமது கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகுவதாக வைத்தியபீட பேராசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாளை பிற்பகல் தொடக்கம் அனைத்து தனியார் வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்தச் சங்கத்தின் உறுப்பினரும்,பேராசிரியருமான வைத்தியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் நாளைய தினம் குறித்த சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிராக இ.போ.ச ஊழியர்கள்,அரச வைத்திய அதிகாரிகள்,பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பல நாளைய தினம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.