அரச வைத்திய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு – நெவில் பெர்னான்டோ

222 0

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியின் தலைவர் நெவில் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சைட்டத்துக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த பணிபகிஸ்கரிப்பின் போது குறித்த வைத்தியர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை பொது இடத்தில் வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்திய அதிகாரிகள் சங்கமானது சைட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில்,அப்பாவி பொதுமக்கள் குறித்து அக்கறையின்றி இருப்பதாகவும் நெவில் பெர்னான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களது ஒரே நோக்கம் சைட்டத்தை மூடுவது மாத்திரமே என்றும் இவர்கள் எதற்காக சைட்டத்துக்கு எதிராக நடந்துக்கொள்கிறார்கள் என்றும்,தெரியவில்லை என்றும் நெவில் பெர்னான்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.