வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பாரவூர்தியில் மறைத்து கடத்தப்பட இருந்த முதிரை மரக்குற்றிகளே மீட்கப்பட்டுள்ளன.
மடு காட்டுப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்செல்லப்பட இருந்த நிலையில் ஈச்சங்குள பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
பாரவூர்தியை புதுக்குளம் பகுதியில் வைத்து வழி மறித்து சோதனையிட்டபோது சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த 29 முதிரை மரக்குற்றிகள் எருவிற்குள் மறைத்து கொண்டு செல்லப்பட இருந்தமை தெரியவந்தது.