மஹிந்த மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதையே அரசாங்கம் வழமையாக கொண்டுள்ளது – நாமல்

281 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதையே அரசாங்கம் வழமையாக கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இதனை குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர்த்து, மக்களின் மனங்களை உண்மையாக அறிந்து கொள்ள இந்த அரசாங்கத்திற்கு முடியாது போயுள்ளது.

அதனை இந்த மே தினம் எடுத்து காட்டியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.