மனைவிக்காக பெண்ணாகிய கணவர் – காரணம் என்ன?

258 0

கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் பின்னர் ஆண் என தெரியவந்துள்ளது.

கண்டி பேருந்து நிறுத்தும் இடத்தில், பர்தா ஆடை அணித்து நெடு நேரமாக உலவிக்கொண்டிருந்த குறித்த பெண் தொடர்பில் சந்தேகம் கொண்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பின்னர் அவரிம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து அவர் ஆண் என தெரியவந்தது.

கண்டி மயிலபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான, ஒரு பிள்ளையின் தந்தையான இவர் மனைவி மீது கொண்ட சந்தேகம் காரணமாகவே இவ்வாறு பெண் வேடமிட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்து.

26 வயதான தமது மனைவி கம்பளை பகுதியில் பணி புரிவதாகவும், பணிபுரியும் இடத்தில் ஒருவருடன் தவறான தொடர்பு கொண்டுள்ளதாகவும் சந்தேகித்து அதனை கண்டறியவே இவ்வாறு பெண் வேடமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.