தம்மாலோக தேரரை அச்சுறுத்தியவர் கைது

244 0

கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து உடுவே தம்மாலோக தேரரை, அச்சுறுத்தியதாக கூறப்படும் ஒருவர் வாழைத்தோட்டப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5ம் திகதி இந்த அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, இது குறித்து தேரர் வாழைத்தோட்டப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதற்கமைய, சந்தேகநபரை தம்மாலோக தேரர் அடையாளம் காட்டியுள்ளார்.

தற்போது கைதுசெய்யப்பட்ட நபர் வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.