பாதுகாப்பு கமெராக்களின் கட்டுபாட்டில் வரும் இரண்டாவது நகரம்

238 0

கொழும்பு நகரை தவிர, சீ.சீ.டிவி கமெராக்கள் ஊடாக முழு நகரையும் கண்காணிக்கும் செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது நகரமாக அநுராதபுரம் திகழவுள்ளது.

அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கெமரா கண்காணிப்பு பிரிவை, நாளை காலை 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளார்.

அத்துடன், அநுராதபுரத்துக்கு வரும் உல்லாச பயணிகளுக்கு தகவல் வழங்குவதற்காக சுற்றுலா மத்தியநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தன்னியக்க தகவல் இயந்திரத்தை, காலை 9.45 மணியளவில் திறந்துவைக்கவுள்ளார். இதேவேளை,  மாகாண சபைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை காலை 10 மணிக்கு திற்துவைக்கவுள்ளார்.