தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்கள் கைது!

201 0

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 மீனவர்கள் மன்னார், சவுத்பார் கடற் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட மத்திய கடற்படை முகாமில் பணியாற்றும் குழுவினர் மற்றும் மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது தடைசெய்யப்பட்ட 04 வலைகள், டைவிங் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட 06 முகமூடிகள் மற்றும் 2210 கிலோகிராம் மீன்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்களும், பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.