கீதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் முக்கியமானது

236 0

பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த நாட்டு வரலாற்றில் நீதிமன்றம் ஒன்றினால் வழங்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்ப்பாகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூறியுள்ளது.
இன்று கொழும்பில் நடத்தியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்கள் சிலர் இதனைத் தெரிவித்தனர்.

இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது மிக முக்கியமான தீர்ப்பாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்களான மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர மற்றும் லக்‌ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரிடம், கீதா குமாரசிங்கவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இவ்வாறு கூறியிருந்தனர்.