காபுலில் தற்கொலை தாக்குதல்

280 0

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் நிலைகொண்டுள்ள ‘நேட்டோ’ அமைப்பின் படையினை குறிவைத்து தற்கொலை தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் எட்டு பேர் பலியானதுடன், மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு அருகாமையில் உள்ள ‘நேட்டோ’ வாகனங்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.