அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு அனுகூலமானது – உயர் நீதிமன்றம் அறிவிப்பு

275 0

அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு அனுகூலமானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த சட்;ட மூலத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, சட்டத்தரணி தர்ஷண வேரதுவகே மற்றும் நாகஹனந்த கொடித்துவக்கு ஆகியோர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் வெளிப்படுத்தப்பட்டது.

அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டமூலம் அரசியல் அமைப்புக்கு அனுகூலமானதா? இல்லையா? என்பது தொடர்பில் உயர் நீதிமன்றில் விளக்கம் கோரப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.