சிரிய – ஈராக் எல்லையில் உள்ள அகதிகள் முகாம் தற்கொலைத் தாக்குதல் – 32 பேர் பலி

301 0

சிரிய – ஈராக் எல்லையில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் குறைந்த பட்சம் 32 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வந்தன.

அவர்கள் அரசக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் பிரவேசிக்க காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும், பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து, சிரிய அரசப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.