கிளிநொச்சி உருத்திரபுரம் – பூநகரி வீதியில் உள்ள நீவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
நீவில் குளத்திற்கு அருகில் உள்ள பாரிய கிணற்றை இயந்திரத்தினால் மூடும் நடவடிக்கையில், பொதுமக்கள் ஈடுபட்டிருந்த போதே இவ்வாறு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு 17 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.